Powered By Blogger

Saturday, August 21, 2010

Thursday, August 19, 2010

http://vinaiooki.blogspot.com/2008/04/blog-post_09.html

குழந்தை அஞ்சலியுடன் விளையாடிக்கொண்டே இருந்த கார்த்தி, வீட்டு வேலைகளை முடித்து அருகில் வந்து உட்கார்ந்த ரம்யாவிடம்



"ரம்யா, என்னோட புது மொபைல் நம்பரை குறிச்சுக்கோ!”


“கார்த்தி, என் மொபைலுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுங்க, ஸ்டோர் பண்ணிடுறேன்”


ரம்யா சொன்னவாறே செய்துவிட்டு குழந்தை அஞ்சலிக்கு தனது உலாபேசியின் எண்ணை மனனம் செய்யவைத்த கார்த்தி அஞ்சலிபாப்பாவிடம்.


“கார்த்திபா வோட போன் நம்பர் சொல்லுடாக்குட்டி”


“98407...”
”ம்ம் அடுத்த அஞ்சு நெம்பர் சொல்லுடா செல்லம்”

அதையும் அஞ்சலிபாப்பா சரியாகச் சொல்ல வாரி அணைத்துக் கொண்டான்.
“கார்த்தி, யூகேஜி படிக்கிற குழந்தைக்கு போன் நெம்பர் எல்லாம் ஞாபகம் வச்சுக்கனும்னு என்ன அவசியம்?”

“ நினைவு சக்தியை அதிகமாக்கிக்கொள்ள இது கூட ஒரு பிராக்டிஸ் ரம்யா.. அது இருக்கட்டும் நாளைக்கு ஈவ்னிங் மோகன் சார் வீட்டுல சின்ன கெட்டுகெதர்... அஞ்சலியைக் கூட்டிட்டு நேரா அங்க வந்துடு”
மறுநாள் புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த மோகனின் வீட்டிற்கு ரம்யா அஞ்சலிப்பாப்பாவுடன் வண்டியில் போகும்பொழுது அவளது ஸ்கூட்டி பாதி வழியில் நின்று தகராறு செய்தது. சரி கார்த்தியை உலாபேசியில்கூப்பிடலாம் என்றால் அதை வீட்டிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்திருந்தாள். வண்டியை மெதுவாக உருட்டிக்கொண்டு அருகில் இருந்த ஒரு கடைக்கு வந்து கார்த்திக்கு தொலைபேச நினைத்தபொழுதுதான் கார்த்தியின் புது எண் அவளுக்குத் தெரியவில்லை. அஞ்சலிப்பாப்பாவிடம்
“குட்டிமா, கார்த்திபாவோட போன் நம்பர் சொல்லு”
“9..8.. ..4... 0 7” என தனது மழலை மொழியில் கார்த்தியின் உலாபேசி எண்ணை அஞ்சலிப்பாப்பா சொல்லி முடித்தவுடன் அதை இறுக்க அணைத்த படி, இரவு போனதும் தனது எண்ணையும் அஞ்சலிப்பாப்பாவிற்கு மனப்பாடம் செய்ய வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் கார்த்தியை, தொலைபேசியில் அழைத்தாள்.
திருட்டுப்போய்விட்டதா??? கண்டுபிடிக்க மென்பொருள்

உங்கள் தொலைபேசி தொலைந்தவிட்டதா? திருடுபோய்விட்டதா?? கவலையை விடுங்கள்.. இதற்கு இப்போது மென்பொருள் ஒன்று உள்ளது இம் மென்பொருளை உங்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்து மென்பொருளை போட்டுக்கொள்ளுங்கள்... அந்த மென்பொருளில் இரண்டு தொலேபேசி இலக்கங்களை இணைத்து password கொடுத்து வைக்கவேண்டும்.....உங்கள் தொலைபேசி களவுபோய்விடின் களவாடியவன் உங்கள் sim card ஐ எடுத்து வீசிவிட்டு அவன் தனது sim card ஐ போட்டதும் நீங்கள் ஏற்கனவே கொடுத்த இரண்டு இலக்கங்களுக்கு sms மூலம் திருடியவன் தொலைபேசி இலக்கம் கிடைக்கும்......திருடியவனை எளிதாக கண்டு பிடிக்கலாம்....................
கம்பியில்லா தொலைதொடர்பு முறைகள்



இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக நகரும் தொலைபேசிகளிகள் பட்டணங்கள் முதல் நாட்டுப்புறங்கள் வரை பரவியுள்ளது. நகர் பேசிகளின் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நகர்பேசி ஒரு அந்தஸ்துக் குறியாக இருந்த போதில் இன்று அது நாடங்கும் ஸகஜமான பொருள் ஆகிவிட்டது. பல்வேறு கருவிகள் பல்வேறு திட்டங்கள் பல்வேறு சேவை நிறுவங்கள்... இங்கு நகர்தொலைதொடர்பின் தொழில்நுட்பங்களை சந்தித்து ஆராய்வோம்.



முதலாக சந்திப்போம் CDMA என்றழைக்கப்படுகிற குறியீடு பிரிப்பு பன்னணுகல், அதாவது Code Division Multiple Access. வானொலியை சுருதிகூட்டும் போது ஒரே அலைவெண்ணில் இரண்டு நிலையங்களில் ஒலிபரப்பை ஒரே நேரத்தில் கேட்கலாம். இதற்கு காரணம் நிலையங்களிலிருந்து வரும் வானொலிக் கிறிகைகள் (radio signals) ஒரே அலைவெண்ணில் இருப்பதால் அவை ஒன்றுக்கொன்று குறுக்கிடுகிறன. CDMAயில் இந்த குறுக்கிடுதல் நம்மை அறியாமல் ஏற்படுகிறது. CDMA முறையில் இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு (digital voiced data) ஒரு பரவல் குறியீடு (spreading code) மூலம் அலைவெண் கற்றையகலம் (frequency bandwidth) முழுவதும் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு அழைப்பிற்கும் ஒரு தனிப்பட்ட பரவல் குறியீடு வழங்கப்படுகிறது. இக்குறியீடு மூலம் அலைவெண்ணில் பரவப்பட்ட அழைப்புகள் ஒன்றுக்கு மேல் ஒன்று உடன்வைக்கலாம். CDMA வலையத்தில் அழைப்பவர் மற்றும் அழைக்கப்படுபவர் கருவிகள் மட்டும்தான் கருவிகளில் அதே பரவல் குறியீடு ஒதுக்கப்படுகின்றன. ஆகையால் இவ்விருவர்களுக்கிடையே தொடர்பு தெளிவாக இருக்கும். வலையத்தில் உள்ள மற்ற கருவிகளில் யாதெனும் வேறு அழைப்புகளில் இணைந்திருந்தால் அவைகளுக்கு வெவ்வேறு பரவல் குறுயீடுகள் ஒதுக்கப்படுகின்றன. அவர் முதல்கூறப்பட்ட அழைப்பு சிறுதளவும் உணரமாட்டார்கள். இது மூலம் பல்லாயிரம் அழைப்புகளை கற்றையகலத்தில் பரப்பி ஒன்றுக்கொன்று மேல் அடுக்கலாம். இதற்கு பரவல் நிறமாலை தொழில்நுட்பம் (spread spectrum technology) என்று அழைக்கப்படுகிறது.



CDMA தொழில்நுட்பம் ஒப்புகையில் GSM என கூறப்படும் ஸகல நகர்தொலைதொடர்பு முறைமை, அதாவது Global System for Mobile Communication. GSM எனப்படுவது காலப்பிரிப்பு பன்னணுகல் (Time Division Multiple Access) முறையில் அழைப்புகள் வலையத்தை பகிர்க்கின்றன. GSM மூலம் குரல் தரவுகள் குறுகப்பட்டு (compressed voice data) அதிக அழைப்புகளை வலையத்தில் ஏற்க இயல்பாகிறது.



ஒரு கம்பியில்லா முறைமையில் (Wireless Network) பல உறுப்புக்கள் உள்ளன. முதலில் இருப்பது நகர் நிலையம் அதாவது Mobile Station. இதுதான் ஒரு சந்தாதாரரின் நகர்பேசி (mobile phone). இது வானலைச் செலுத்துப்பெறுவி (radio transceiver), காட்சி (display), இலக்கக்குறிகைச் செயலிகள் (digital signal processor-DSP), சூட்டிகையட்டை (smart card) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூட்டிகையட்டைக்கு சந்தாதாரர் அடையாளக்கூறு அதாவது Subscriber Identification Module எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு நகர்பேசிக் கருவியின் தனித்தன்மையான அடையாளத்திற்கு பன்னாட்டு நகர்கருவி அடையாளம்-International Mobile Equipment Identification-IMEI எனப் பெயர். SIM சூட்டிகையட்டையில் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - International Mobile Subsriber Identity (IMSI) பதிந்துள்ளது. IMEI மற்றும் IMSI ஒன்றுக்கொன்று தினியானவை, அவைகளில் சேர்மானமும் தினித்தன்மையானது.



கம்பியில்லா அமைப்பின் அடுத்ததான உறுப்பு தளநிலையம் அதாவது Base Station. ஒரு தளநிலையம் என்பது தள செலுத்துப்பெறு நிலையம் (Base Transceiver Station-BTS) மற்றும் தளநிலைய இயக்ககம் (Base Station Controller-BSC) என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு BSC துணையமைப்பு பல வானலை செலுத்துப்பெறுவிகளைக் கொண்டது. நகர்நிலையத்தின் தொடர்பிற்கான வானிணைப்புகளை நிர்வாகிக்கிறது. பட்டணப் பகுதிகளில் BTSகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஒரு BSC பல BTSகளை நிர்வாகிக்கும். ஒரு BSC வானலைவரிவை துவக்கம் (radio channel setup), அலைவெண் துள்ளல் (frequency hopping), கைமாற்றங்கள் (handovers) ஆகிய செயல்கூறுகளை பூர்த்திசெய்கிறது. BSC எனப்படுவது நகர் நிலைமாற்றகத்திற்கும் (Mobile Switching Center-MSC) நகர்கருவிக்கும் இடைமுகமாக அமைந்துள்ளது.



பிணையத் துணையமைப்பின் (Network Subsystem) மையத்தில் நகர் நிலைமாற்றகம் (Mobile Switching Center-MSC) சேர்ந்துள்ளது. அது ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு (Public Switched Telephone Network) அல்லது ஒருங்கிணை இலக்கச் சேவைப் பிணையத்திற்கு (Integrated Services Telephone Network-ISDN) ஒரு சாதாரண கணுவாக விலங்குகிறது. இது தவிற்று, நகர்கருவியுடன் பதிவுசெய்தல், உறுதிபடுத்துதல் (authentification), இருப்பிடம் புதுப்பித்தல் (location update), கைமாற்றம் (handover), அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு (roaming subscriber call routing) ஆகிய பொறுப்புக்களை தாங்கும். MSC துணைமுறைமை SS7 என்ற குறிகைமுறை (signalling) மூலம் ஒரு PSTN அல்லது ISDN பிணையத்திற்கு இணைகின்றது. இல் இருப்பிடம் பதிவகம் (Home Locator Register-HSR) மற்றும் விஜயர் இருப்பிடம் பதிவகம் (Visitor Locator Registor-VLR) இரண்டும் MSCஉடன் ஒரு GSM அழைப்பின் திசைவு (call routing) மற்றும் அலையல் (roaming) திற்மைகளை பூர்த்திசெய்கின்றன. ஒரு சந்தாதாரரின் எல்லா நிர்வாக விவரங்களும் (administrative information) HLR மூலம் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரரின் தற்போதய இருப்பிடம் நகர்நிலைய அலையல் எண் (Mobile Station Raoming Number-MSRN) என்ற வடவத்தில் அறியப்படுகிறது. இந்த MSRN எண் மூலம்தான் ஒரு அழப்பு ஒரு சந்தாதாரர் கருவிக்கு திசைவுசெய்யப்படுகிறது. ஒரு GSM பிணையத்தில் தருக்கம்படி ஒரு HSR இருக்கும், ஆனால் ஒரு பரவல் தரவித்தளமாகக்கூட (distributed database) செயல்படுத்தப்படலாம். VLR பதிவகம் அதன் கட்டுப்பாடு பகுதியிலுள்ள நகர்கருவிகளின் ஒருசில நிர்வாக விவரங்கள் மட்டும் HSRயிலிருந்து எடுத்து சேகரிக்கும். MSCயிலேயே நகர்நிலையங்களின் விவரங்கள் சேமிக்கப்படாது. MSCஉம் VLRஉம் கம்பியில்லா நிலைமாற்றுக் கருவிகளில் ஒன்றாக செயல்படுத்தப்படுகிறது. ஆகையால் அவைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளும் ஒன்றானவையே. நகர்கருவி அடையாளப் பதிவகம் மூலம் ஒரு GSM பிணையித்திலுள்ள எல்லா நகர்கருவிகளின் IMEI எண்கள் ஒரு தரவுத்தளத்தில் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரின் நகர்கருவி தொலைந்தால் அதன் IMEI எண் தரவுத்தளத்தில் குறிக்கப்படுகிறது. உறுதிப்படுத்தகம் (Authentification Center) சந்தாதர்களின் SIM சூட்டிகையட்டையின் ரகசியக் குறியீட்டை சேகரித்து நகர்கருவிகளை ஒரு பிணையத்திலுள் உறிதிபடுத்தும்.



இந்தியாவில் CDMA சேவையை வழங்கும் நிறுமங்கள் Tata Indicom மற்றும் Reliance Infocom. GSM வழங்கும் நிறுமங்கள் Airtel, Hutch, தமிழகத்தில் Aircel, பெங்களூரில் Spice Telecom போன்றவை.




வியாழன், 19 ஆகஸ்ட் 2010 05:39 [LINK=/index.php?option=com_mailto&tmpl=component&link=aHR0cDovL3RhbWlsY25uLmNvbS9pbmRleC5waHA/b3B0aW9uPWNvbV9jb250ZW50JnZpZXc9YXJ0aWNsZSZpZD04NjMzOjIwMTAtMDgtMTktMDUtNDUtMjkmY2F0aWQ9MTIxOjIwMTAtMDItMjQtMTQtMjYtNTAmSXRlbWlkPTY1Nw==][IMG]/templates/ja_teline_iii/images/emailButton.png[/IMG][/LINK] [LINK=/index.php?view=article&catid=121%3A2010-02-24-14-26-50&id=8633%3A2010-08-19-05-45-29&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=657][IMG]/templates/ja_teline_iii/images/printButton.png[/IMG][/LINK] [LINK=/index.php?view=article&catid=121%3A2010-02-24-14-26-50&id=8633%3A2010-08-19-05-45-29&format=pdf&option=com_content&Itemid=657][IMG]/templates/ja_teline_iii/images/pdf_button.png[/IMG][/LINK] [LINK=/images/stories/tamilcnn/august/britain/article-0-04b1c884000005dc-889_468x361.jpg][IMG]/images/resized/images/stories/tamilcnn/august/britain/article-0-04b1c884000005dc-889_468x361_200_200.jpg[/IMG] [/LINK]


சமூக வலைகளில் மூழ்கியிருக்கும் இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை மாற்ற வேண்டிய சூழல் எதிர்காலத்தில் உருவாகும் என எச்சரிக்கிறார் கூகிள் நிறுவன செயல் தலைவர் எரிக்.







இன்றைய கால கட்டத்தில் பெரும்பான்மையான இளைஞர்கள் நட்புக்காகவும் மேலும் பல விடயங்களுக்காகவும் சமூக வலைதளங்களுக்கு சென்று தங்கள் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கொடுத்து வருகின்றனர்.







இது போன்ற வலைதளங்களில் எந்த அளவிற்கு சாதகங்கள் இருக்கின்றனவோ அத விட அதிகமாக பாதகங்களும் உள்ளன என்பது போன்ற எச்சரிக்கை கட்டுரைகள் பல வந்தும் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஒரு மிகப் பெரிய பொழுது போக்காக மாறிக் கொண்டுதான் வருகின்றது.







கடந்த வாரத்தில் பரபலமான சமூக வலையில் ஊடுருவிய சிலர் அதில் இருந்த புகைப்படங்களை ஆபாசப் படங்களுக்காக பயன்படுத்தியதும் வேறு பல குற்றங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.







சமூக வலைதளங்களில் இது போன்ற தனிப்பட்ட விபரங்களை அளிப்போர் தங்கள் அடையாளங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முக்கியமாக இளைஞர்கள் தங்கள் பெயரையே மாற்ற வேண்டிய சூழலுக்கும் தள்ளப்படுவர்.







இளைஞர்கள் மற்றும் வாசகர்கர்களின் நலன் கருதி இது தொடர்பான சில விடயங்களை விளக்க விரும்புகிறது தமிழ் சி.என்.என்







சொல்லப்போனால் இது ஒரு பார்ட்டிக்கு செல்வது போன்றது தான். வீடு, அலுவலகம் போன்ற அனைத்து இடங்களிலிருந்தும் இந்த சமூக வலைத்தளங்கள் உபயோகிக்கப் படுகிறது. பலரும் தங்கள் சொந்த விபரங்கள் அனைத்தையும் அங்கே தெரிவித்து விடுகின்றனர். ஒரு உதாரணத்திற்காக சொல்ல வேண்டுமானால் எங்கோ பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.







உங்களுடன் அருகாமையில் இருக்கும் சகபயணி உங்களை தெரியாதவர் புதிதாக நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாக சொல்கிறார் என்றால் அவரிடம் போய் உடனடியாக அ முதல் ஃ வரையிலான உங்கள் குடும்ப மற்றும் தொழில் சார்ந்த விபரங்களையும் புகைப்படங்களையும் காண்பிப்பீர்களா?? அப்படி ஒரு வேளை நீங்கள் செய்தால் அது உங்கள் தவறே தவிர அவருடைய தவறாகாது.







தவறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பவர் என்றால் அதை பயன்படுத்தத்தானே செய்வார். சமூக வலைதளங்களில் அனைத்து விபரங்களையும் கொடுத்து விட்டு வம்பில் மாட்டிக்கொண்டு வாழ்கையையும் , தொழிலையும் இழந்தவர்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் இந்த அட்டுழியங்களால் மன நிம்மதியை இழந்தும் வருகின்றனர்.







சமூக வலைதளங்களில் இருக்கும் சுயவிபர பக்கத்தில் உங்கள் விபரங்களை முற்றிலும் கொடுக்காமல் இருப்பது சிறந்தது. சிலர் பெயர், முகவரியில் தொடங்கி தொலைபேசி எண்கள், பணி விபரங்கள், பிறந்த நாள், அவர் தினமும் செய்யும் பணிகள் என்னென்ன என்பதையும் மற்றும் அவர்தம் குடும்ப விபரங்கள், குடும்ப புகைப்படங்களை எல்லாம் அதில் போட்டு விடுகின்றனர்.







இது போதாதா தவறு செய்ய காத்திருக்கும் கழுகு கூட்டங்களுக்கு. இந்த வலைதளங்கலாவது ஏதாவது முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. ஒரு நபரின் மூலமாக அவர் நண்பர்கள் அனைவரின் விபரங்களையும் பார்க்க முடிகிற அளவிற்கு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.







1 . இந்த வலைதளங்களில் எந்த அளவிற்கு நன்மை உள்ளதோ அதைவிட அதிகமாகவே பயன்படாத விஷயங்களும் உள்ளது. அதால் சமூக வலைகளில் பார்ப்பனவற்றை எல்லாம் அப்படியே உண்மை என நம்பக்கூடாது. அவரவர் சொந்த ஆதாயத்திற்காகவும் தகவல்களை திருடுவதற்காகவும் பொய் சொலவது தான் அங்கு பெரும்பான்மையாக நடக்கிறது. எந்த தொழில் செய்பவராக இருப்பினும் சமூக வலைகளை அளவோடு பயன்படுத்துவது. இதனால் சிறு மற்றும் குறு தொழில்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகின்றன.







2 . இந்த சமூக வலைதளங்களில் பெரும்பான்மையான தளங்களில் மூன்றாம் நபர் அப்ளிகேஷன் மூலமாக மறைக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட தகவல்களை கூட எடுத்து விட முடியும். இது எவ்வளவு பெரிய தீங்கு விளைவிக்கும் செயல் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.







3 . இன்னும் சில இடங்களில் தொழிலாளர்கள் தவறாக பயன்படுத்துவதால் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் தகவல்கள் திருட்டு போய்க் கொண்டிருக்கின்றன. சில தொழிலாளிகள் தன்னை பற்றிய விபரங்களை இது போன்ற தளங்களில் கொடுக்கும் போது எங்கே வேலை செய்கின்றார் என்பதையும் பணியின் தன்மையையும் குறிப்பிடுகின்றார். அதை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு கெடுதல் நினைக்கும் கும்பல்கள் இவரிடம் நண்பர் போன்று பேசியோ அல்லது மூன்றாம் நபர் அப்ளிகேஷன் மூலமாகவோ அந்த நிறுவனத்தின் விற்பனை சார்ந்த யுக்திகளை தடுப்பதும் அதனை தங்களுக்கு சாதகமாகி கொள்வதும் தொடர்கிறது. பணியாளர்களிடம் பணியில் சேரும் முன் இது போன்ற தொழில் ரகசியங்களை சமூக வலைகளில் தெரிவிக்க கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொள்வது மிகவும் நல்லது.







4 . சமுக வலைதளங்களின் மூலமாக உங்கள் கணினியில் வைரஸ்கள் , spyware , malware ஆகியவை பரவ வாய்ப்புண்டு. இதற்கு தீர்வு தான் என்ன?? இதற்காக சமுக வலைகளை முற்றிலுமாக அழித்து விட முடியுமா என்றால் அதுவும் முடியாது. சில நன்மைகளும் இருப்பதால் நாளுக்கு நாள் இவை பெருகிக் கொண்டே தான் போகும். கவனமான முறையில் சிந்தித்து பயன்படுத்தினால் நன்மையே.

hi................

hi.....
iam arusan .
thuraineelavanai.........